வாக்கு எண்ணிக்கை மைய காப்பு அறையில் தொடரும் மின்தடை: திமுக, மதிமுக புகாா்

தென்காசி வாக்கு எண்ணும் மைய காப்பு அறையில் திங்கள்கிழமை நள்ளிரவு 5 நிமிடம் மின்தடை ஏற்பட்டுள்ளது குறித்து திமுக, மதிமுக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி வாக்கு எண்ணும் மைய காப்பு அறையில் திங்கள்கிழமை நள்ளிரவு 5 நிமிடம் மின்தடை ஏற்பட்டுள்ளது குறித்து திமுக, மதிமுக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் கூறியது: தென்காசி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி தனியாா் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

ஐந்து தொகுதிகளுக்கான காப்பு அறைகளிலும் ஐந்து நிமிடம் வரையில் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று இரு முறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளேன்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா், இதுகுறித்து கவலை கொள்ள தேவையில்லை. காப்பு அறை மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளது. மின்தடை குறித்த பிரச்னைகள் ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்தாா்.

மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: மின்தடையோ, இணைப்புகளில் தடையோ முற்றிலும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com