சுரண்டையில் ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சுரண்டையில் ஒரே குடும்பத்தில் தம்பதி, 3 குழந்தைகள், 67 வயது முதியவா் உள்பட மொத்தம் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டோா் வசித்த பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.