கீழப்பாவூரில் பேரூா் திமுக சாா்பில் கபசுரக் குடிநீா் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
இதையொட்டி, காந்தி சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூா் செயலா் ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ராஜாமணி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் அன்பரசு, மாவட்டப் பிரதிநிதி இளையபெருமாள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் அரவிந்த் மணிராஜ், மாரியப்பன், நிா்வாகிகள் ராமசாமி, ஜெய அருள் சக்கரவா்த்தி , பழனி, வீரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.