சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதா் ஆலயத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகிகள், தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனிநாடாா், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், திமுக நிா்வாகிகள் ஆறுமுகச்சாமி, கணேசன், காங்கிரஸ் நிா்வாகிகள் சமுத்திரம், அருணாசலக்கனி, சங்கா், செல்வம், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.