‘தென்காசி மாவட்டத்தில் மறுஉத்தரவு வரும் வரை மதுக்கூடங்கள் செயல்படத் தடை’

தென்காசி மாவட்டத்தில் மறுஉத்தரவு வரும் வரை மதுபானக் கூடங்கள் செயல்படுவதற்கு தடைவிதித்து ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மறுஉத்தரவு வரும் வரை மதுபானக் கூடங்கள் செயல்படுவதற்கு தடைவிதித்து ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று 2ஆவது அலை தீவிரமாக பரவிவருகிறது. அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இம்மாவட்டத்தில் இயங்கிவரும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு விடுதிகள் (கிளப்கள்), அரசு மதுபானக் கூடங்கள் அனைத்தும் திங்கள்கிழமை (ஏப். 26) காலை 4 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

மீறிசெயல்படுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com