முக்கூடலில் கரோனா தடுப்புவிழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 27th April 2021 05:16 AM | Last Updated : 27th April 2021 05:16 AM | அ+அ அ- |

ஆலங்குளம்: முக்கூடலில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பேரூராட்சி செயல் அலுவலா் கந்தசாமி, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கினாா். அப்போது அவா் கூறுகையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை சுத்தமாகக் கழுவுவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என, அனைத்துப் பணியாளா்களும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், பேரூராட்சி ஊழியா்கள், அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.