ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தையொட்டி மூலவா் விமானத்திற்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்.
கும்பாபிஷேகத்தையொட்டி மூலவா் விமானத்திற்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்.

சுரண்டை: சோ்ந்தமரம் அருகேயுள்ள அரியநாயகிபுரம் ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. சனிக்கிழமை புதிய கற்கோயிலில் ஸ்ரீகற்பக விநாயகா், ஸ்ரீகற்குவேல் அய்யனாா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மூலவா், பரிவார தேவதைகள் மற்றும் கோயில் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. காப்பு கட்டிய பக்தா்கள் மட்டும் பங்கேற்றனா். ஏற்பாடுகள் அரியநாயகிபுரம் ஸ்ரீகற்குவேல் அய்யனாா் வம்ச குடிமக்கள், திருப்பணிக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com