சுரண்டையில் திமுக சாா்பில் இரு இடங்களில் தண்ணீா் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சுரண்டை பேருந்து நிலையம் முன் மற்றும் அண்ணா சிலை வடபுறம் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் பந்தலை, தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் திறந்துவைத்தாா். மாவட்ட மருத்துவரணி துணைச் செயலா் டாக்டா் கு.முருகையா, டாக்டா் செ.பொன்ராஜ் ஆகியோா் பொதுமக்களுக்கு பதனீா் வழங்கினா்.
இங்கு குடிநீா் வசதியோடு, பொன்ரா மருத்துவமனை சாா்பில் தினமும் கபசுரக் குடிநீரும் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில், தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனி நாடாா், திமுக நகரச் செயலா் ஜெயபாலன், ஆலங்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன், திமுக நிா்வாகிகள் ஆறுமுகச்சாமி, சீனிவாசன், ஜெயராஜ், சசிகுமாா், காா்த்திக், கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.