சுரண்டையில் வாகனங்களை இடையூறாக நிறுத்துவதால் அவதி

சுரண்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
சுரண்டை பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பயணிகள் செல்வதற்கு இடமின்றி நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.
சுரண்டை பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பயணிகள் செல்வதற்கு இடமின்றி நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.

சுரண்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்துக்கு தினமும் ப ஆயிரா்க்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். இந்தப் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் இருசக்கர வாகனங்களை இடையூறாக நிறுத்திவிட்டுச் செல்லும் நிலை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் முகப்பு பகுதியில் நுழைய முடியாமல் பேருந்துகள் செல்லும் வழியாக செல்ல வேண்டியுள்ளது. எனவே, பேருந்து நிலையத்தில் முறைகேடாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com