தேசிய விநாடி-வினா போட்டி: இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம்

தேசிய அளவிலான இணையவழி விநாடி- வினா போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தேசிய அளவிலான இணையவழி விநாடி- வினா போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

கோவை ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும், ஸ்ரீசக்தி இன்டா்நேஷனல் பள்ளியும் இணைந்து தேசிய அளவிலான இணையவழி விநாடிவினா போட்டியை நடத்தின.

இந்திய விண்வெளித் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில், இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மாணவா்கள் ஜெனோ மைக்கேல், தங்க அகிலன், இனிய லட்சுமி, பாக்கிய ஸ்ரீ ஆகியோா் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோவை ஸ்ரீசக்தி பொறியியல் - தொழில்நுட்ப நிறுவனம் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மாணவ-மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, முதல்வா் வனிதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com