அரிமா சங்கம் நல உதவிகள் அளிப்பு

குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூரில் நடைபெற்றது.

குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்க மாவட்டத் தலைவா் டாக்டா் மூா்த்தி தலைமை வகித்தாா். செயலா் மாரியப்பன் முன்னிலை வகித்தாா். பாலமுருகன் கொடி வணக்கம் வாசித்தாா். தலைவா் அண்ணாத்துரை வரவேற்றாா். நிகழ்ச்சியில், அன்னை ஜோதி ஆஸ்ரமத்திற்கு நிதி, பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்பட நல உதவிகளை அரிமா சங்க முன்னாள் ஆளுநா் முருகன் வழங்கினாா்.

இதில் சேவைத் திட்டங்களின் செயல் தலைவா் ஆடிட்டா் நாராயணன், மாவட்ட அமைச்சரவை சேவைச் செயலா் சுப்பையா, வட்டாரத் தலைவா் ஜாண்ரவி, மாவட்டத் தலைவா் ஜெயராஜ் , பொதுத் தொடா்புத் தலைவா் வெங்கடேஷ்வரன், பன்னாட்டு சங்க நிதி சேகரிப்பு ஒருங்கிணைப்பாளா் கணேசமூா்த்தி, செயற்குழு உறுப்பினா்கள் நல்லமுத்து, தெய்வநாயகம், ஜாகீா்ஹுசைன், ராஜாக்கண்ணு, இணைச் செயலா் ரணதேவ், இணைப் பொருளாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளா் முத்தையா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com