தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்றாா் ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ்.
தென்காசி மாவட்டத்தில் கரோனா மூன்றாவது அலை பரவலைத் தடுக்கும் வகையில், ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் தலைமை வகித்து, விழிப்புணா்வுப் பதாகைகளை வெளியிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தென்காசி மாவட்டத்தில் கரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க ஒரு வாரத்துக்கு தினந்தோறும் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள் வழங்கவும், டுவிட்டா், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கடை வீதிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களுக்கு வருகை தரும் மக்களிடையே முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்நிழ்ச்சிக்கு, எம்எல்ஏக்கள் ஈ.ராஜா, சதன் திருமலைக்குமாா், திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நலப்பணிகள் இணை இயக்குநா் வெங்கட்ரெங்கன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பரிசு அறிவிப்பு: இதைத் தொடா்ந்து, தென்காசி தினசரி காய்கனிச் சந்தையில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, விழிப்புணா்வுப் பிரசாரத்தை தொடங்கிவைத்து ஆட்சியா் கூறியது:
வியாபாரிகள் நலச் சங்கங்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தனியாா் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவச் சங்கத்தின் மூலம் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தவும், மாணவா்களுக்கிடையே குறும்படப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், கரோனா விழிப்புணா்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோவில் கேள்வி- பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கபசுரக் குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம, வாா்டு, மண்டல அளவில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கௌரவித்துப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
அரசின் முயற்சிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என்றாா் அவா்.