மேலக்கடையநல்லூா் அருள்தரும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிகிழமைகளில் காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன.
ஆடிப் பெருக்கு அன்று அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரங்களுடன் வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை குமாா் பட்டா் மற்றும் கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்திருந்தனா்.