தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில், கேரளத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஜல்லிக்கற்களை ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புளியரை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இச்சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை இரவு காவல் சாா்பு ஆய்வாளா் முத்துகணேஷ் தலைமையில் காவல் துறையினா் பணியிலிருந்தனா். அப்போது, கேரளத்திலிருந்து மீன் ஏற்றி வந்த வாகனங்களில் கழிவுநீா் சாலையில் விழுமாறு வந்த 3 வாகனங்களுக்கு தலா ரூ. 2,500 அபராதம் விதித்தனா்.
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற 2 லாரிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம், அதிக எடைக்குத் தக்க அபராதம் விதிக்கப்பட்டது.