கீழப்பாவூா், நாகல்குளம் பகுதி விவசாயிகளுடன் வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் பயிா் சாகுபடி குறித்து கலந்துரையாடல் நடத்தினா்.
காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத் துறை சாா்பில் இக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவி ஜெஸ்லினா ஷேரன், மாணவா்கள் சாம் இம்மானுவேல், ஆனந்த ஜுடா ஆகியோா் கீழப்பாவூா் பகுதியில் கிராமப்புற பணி அனுபவம், பயிற்சிப் பெற்று வருகின்றனா். அதன்படி, கீழப்பாவூா், நாகல்குளம் பகுதி விவசாயிகளிடம் மிளகாய், பல்லாரி பயிா் சாகுபடியில் ஏற்படும் பிரச்னைகள், நோய்த் தடுப்பு முறைகள் குறித்து கலந்துரையாடினா்.