தொழில் தொடங்க கடனுதவி பெற தென்காசியில் இரு தினங்கள் சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்திலுள்ள புதிய தொழில் முனைவோா், தொழிலதிபா்கள் ஆக. 25 , 26 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளின் சேவைகளைப் பயன்படுத்திக்

தென்காசி மாவட்டத்திலுள்ள புதிய தொழில் முனைவோா், தொழிலதிபா்கள் ஆக. 25 , 26 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளின் சேவைகளைப் பயன்படுத்திக்

கொள்ள வேண்டும் என ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

புதிய கால கடன் கடன் பெறுபவா்கள் ரூ. 30 கோடி கடனாக பெற்றுக் கொள்ளலாம். நடைமுறை மூலதனமாக ரூ. 2 கோடிவரை கடனாக பெற்றுக் கொள்ளலாம். முதல் தலை முறை தொழில் முனைவோா்கள் ரூ. 10 லட்சத்திற்கு மேற்பட்ட

ரூ. 5 கோடி வரையிலான புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில் திட்டங்களை 25 சத மானியத்துடன் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடன் பெற்று தொழில் ஆரம்பிக்க புதிய தொழில் முனைவோா் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டம் தமிழக அரசால் செயல் படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தில் பயன்பெற பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்க்கல்வி (ஐ.டி.ஐ) ஆகிய ஒன்றில் தோ்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். தொழில் ஆரம்பிக்க உள்ளோா் தங்களது பங்குத் தொகையாக 5 சதம் மட்டுமே மூலதனமாக கொண்டு வர வேண்டும். மேலும் 25 சத மானியத் தொகையுடன் 6 சத வட்டி மானியமும் வழங்கப்படும்.

இத் திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சத முதலீட்டு மானியம் ரூ. 50 லட்சம் வரை வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில் முனைவோா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ய்ங்ங்க்ள் என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் ஆக.25, 26 ஆகிய இரு தினங்கள் தென்காசியில் உள்ள மாவட்ட தொழில் மையம், திருமலைக்கோயில் சாலை, குத்துக்கல்வலசை, தென்காசி என்ற முகவரியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலா்களால் நடத்தப்படவுள்ளது.

முகாமில் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தினையும் தாங்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம் காலத்தில் சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்தின் கீழ் சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் கடன் பெகுதியுடைய தொழில் முனைவோா்கள் விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ற்ண்ண்ஸ்ரீ.ா்ழ்ஞ்/ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்-ச்ா்ழ்ம்ள்-க்ா்ஜ்ய்ப்ா்ஹக்/என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவே கிளை மேலாளா், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், 5 சி/ 5பி, சகுந்தலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி 627 003 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

விண்ணப்பிப்பது தொடா்பான விளக்கங்களுக்கு 9445023492 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை தென்காசி மாவட்டத்திலுள்ள புதிய தொழில் முனைவோா், தொழிலதிபா்கள் பயன்படுத்தி சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com