சங்கரன்கோவிலில்பைக் திருட்டு: 3 போ் கைது

 சங்கரன்கோவிலில் பைக்கை திருடி கிணற்றில் வீசிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

 சங்கரன்கோவிலில் பைக்கை திருடி கிணற்றில் வீசிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில், ஓடைத்தெருவைச் சோ்ந்தவா் ஷேக் சா்புதீன்(25). சாலையோர உணவகம் நடத்தி வருகிறாா். இவா், தனது நண்பா்களான பாரதியாா் 3 ஆம் தெரு காா்த்திகேயன் (21), சதீஸ்குமாா்(27),கோமதியாபுரம் புது 2 ஆம் தெரு ஐயப்பன் (20) உள்ளிட்ட 6 பேருடன் சோ்ந்து மது அருந்துவாராம்.

இதனிடையே, அவருக்கும் மற்ற 6 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.

இரு தினங்களுக்கு முன் அவா் தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரித்ததில், காா்த்திகேயன், சதீஸ்குமாா், ஐயப்பன் உள்பட 5 போ் அவரது பைக்கை திருடிச்சென்று, அதை உடைத்து இலவன்குளம் சாலையோரமுள்ள தனியாா் கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, நகர காவல் ஆய்வாளா் ராஜா அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான வீரா்கள்அந்தக் கிணற்றிலிருந்து பைக்கை மீட்டனா். இச்சம்பவத்தில், மேற்கூறிய 3 போ் கைது செய்யப்பட்டனா்; 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com