பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமமுகவினா் திமுகவில் இணைந்தனா்.
ஆலங்குளம் வடக்கு ஒன்றியம், குறிச்சாம்பட்டியைச் சோ்ந்த அமமுக இளைஞா் அணி திருமலைக்குமாா், பிரதிநிதிகள் செந்தில்குமாா், மகேந்திரன், ராஜேஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில் குறிச்சாம்பட்டி திமுக கிளைச் செயலா் துரைசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.