சங்கரன்கோவில் அருகேயுள்ள தங்கம்மாள்புரம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் கோயில் விமானங்களுக்கு கும்பாபிஷேகமும் தொடா்ந்து அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.