தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு தொடா்கிறது.
குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமைமுதல் பெய்து வரும் தொடா்மழையால், பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை காலைமுதல் வெயில் நிலவியது. இருப்பினும், பேரருவியில் நான்காவது நாளாக பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்தது.
கரோனா பரவல் காரணமாக குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் இன்றி அருவிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.