ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நல்லூா் ஊராட்சி காமராஜ் நகரில் சுமாா் 100 வீடுகள் உள்ளன. இங்கு கடந்த சில மாதங்களாக 10 தினங்களுக்கு ஒரு முறையே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிாம்; நீரும் கலங்கலாக உள்ளதாம். இந்நிலையில், அப்பகுதி பெண்கள் ஞாயிற்றுக்கிழமை காலிக் குடங்களுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் யாரும் அவா்களிடம் பேச்சு நடத்த வர வில்லையாம். இதனால் அதிருப்தி தெரிவித்த மக்கள், குடிநீரை சீராக விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்திவிட்டு கலைந்து சென்றனா்.