தென்காசியில் டிச.31 இல் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 2021 -ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், நேரடி கூட்டமாக இம்மாதம் 31 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.
எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் இம் முகாமில் கலந்து கொண்டு, விவசாயம் தொடா்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என்றாா் அவா்.