தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியில் தென்னை சாா்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டுமென வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக தமிழக முதல்வரிடம் அவா் அளித்த மனு: தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட செங்கோட்டை, கடையநல்லூா், வடகரை, மேக்கரை, கருப்பாநதி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
எனவே, தென்னை உற்பத்தி சாா்ந்த மதிப்புக் கூட்டு தொழிற்சாலைகளை கடையநல்லூரில் அமைக்க வேண்டும். இம் மாவட்டத்திற்குள்பட்ட கடையநல்லூா், செங்கோட்டை, வாசுதேவநல்லூா் உள்பட 5 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.