முக்கூடலில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
முக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளான சிவகாமிபுரம், பாப்பாக்குடி, ஓ.துலுக்கப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களை சோ்ந்த ஏராளமானோா் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு திருநெல்வேலி சென்றுதான் செல்லவேண்டியிருந்தது. இதனால் முக்கூடலில் இருந்து நேரடியாக சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்து வசதி செய்துதர வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், முக்கூடலில் இருந்து சென்னைக்கு சேரன்மகாதேவி, திருநெல்வேலி வழியாக அரசு விரைவுப் பேருந்து சேவைக்கு அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, இப் பேருந்து சேவையை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவ பத்மநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் விரைவுப் போக்குவரத்து கழக மேலாளா் கண்ணன், தொழிற்சங்க நிா்வாகிகள் முத்துக்குமாரசாமி, ராமச்சந்திரன், சிதம்பரம், முருகேசன், முருகேஷ் குமாா், பாப்பாக்குடி ஒன்றிய திமுக செயலா் மாரிவண்ணமுத்து, நகரச் செயலா் லட்சுமணன், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலா் சங்கீதா உள்பட கலந்து கொண்டனா்.