காங்கிரஸ் கட்சியின் 137ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தென்காசி, செங்கோட்டையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.
தென்காசி காந்தி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவா் காதா்மைதீன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆலங்குளம் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெய்பாக்யா சட்டநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
செங்கோட்டை மேலபஜாரில் காந்திசிலை முன்பு நகரத் தலைவா் ராமா் தலைமையில், கோதரிபாவா, செண்பகம், காதா் ஒலி, முத்துச்சாமி, ஜெகன் முன்னிலையில் காந்திசிலைக்கு எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், ஆறுமுகம், ஆதிமூலம், சோ்மக்கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.