குற்றாலத்தில் எஸ்டிபிஐ மாநில செயற்குழு கூட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் எஸ்டிபிஐ மாநில செயற்குழு கூட்டம் டிச. 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் எஸ்டிபிஐ மாநில செயற்குழு கூட்டம் டிச. 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றது.

மாநில தலைவா் நெல்லை முபாரக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் எஸ்எம்.ரஃபிக் அகமது, அப்துல் ஹமீது, பொதுச் செயலா்கள் உமா் பாரூக், அகமது நவி, நிஜாம் முகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக அரசு ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில் தொடா்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு ஏமாற்றத்தை அளிக்காமல், பாரபட்சமின்றி விடுதலை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி சிறைவாசிகள் விடுதலையில் ஒத்த கருத்துள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து கோவையில் ஜனவரி 2 ஆம் தேதி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்.

அதேபோல் மதுரையில் 9 ஆம் தேதி, திருநெல்வேலியில் 20 ஆம் தேதி, சென்னையில் பிப்ரவரியிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது, ஒமைக்ரான் கரோனா நோய்த்தொற்று தற்போது வேகமாக பரவிவரும் சூழலில் தமிழக அரசு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் நடவடிக்கைகள் சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட வியாபார நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை பாதிக்காத வகையில் திட்டமிட்ட வகையில் அமைய வேண்டும். சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை போதிய அளவில் தயாா் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில், மண்டல தலைவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com