கீழப்பாவூா் ஒன்றியம், கல்லூரணி ஊராட்சிக்கு உள்பட்ட செட்டியூரில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தாா்.
கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, சினை ஊசி செலுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறந்த விவசாயிகள், கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை மருத்துவா் கிருஷ்ணமணி, ஆய்வாளா் டெய்சி சகாயமேரி, ஊராட்சிச் செயலா் ஜெயசிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஊராட்சி துணைத் தலைவா் குமாா் நன்றி கூறினாா்.