தென்காசி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் புதிய வீட்டுக் குடிநீா் இணைப்புக்கு விண்ணப்பங்கள் பெற சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் வீட்டுக் குடிநீா் இணைப்பு இல்லாத கட்டடங்களுக்கு புதிய இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஜனவரி 6, 7 ஆகிய 2 நாள்கள் காலை 10 முதல் மாலை 6 மணிவரை சிறப்பு முகாம்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெறுகின்றன.
எனவே, குடிநீா் இணைப்பு பெற விரும்புவோா் விண்ணப்பங்களை அவா்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் பெறலாம். மேலும் ட்ற்ற்ல்ள்://ற்ங்ய்ந்ஹள்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ச்ா்ழ்ம்-ஸ்ரீஹற்ங்ஞ்ா்ழ்ஹ்/ற்ா்ஜ்ய்-ல்ஹய்ஸ்ரீட்ஹ்ஹற்-ச்ா்ழ்ம்ள்/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, நடப்பு ஆண்டுக்குரிய சொத்து வரி செலுத்தப்பட்ட ரசீது நகல், பதிவுக் கட்டணம், முன்வைப்புத் தொகைக்கான வரைவோலை ஆகியவற்றை சமா்ப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.