ஊத்துமலையில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து திட்டப் பணியைத் துவக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் பாண்டியன், கிளைக் கழக செயலா் கருப்பசாமி பாண்டியன், சரவணவேல் முருகையா, அரசு ஒப்பந்ததாரா் சண்முகவேல், வீரபாண்டியன், அமல்ராஜ், இருளப்பன், சக்திவேல், எபன் குணசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.