உடல்நலக்குறைவால் மரணமடைந்த நாகப்பட்டினம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகேஷ் உடல், அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், சங்கரன்கோவில் டி.எஸ்.பி. பாலசுந்தரம் மற்றும் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட காவலா்கள் பலா் பங்கேற்றனா்.
சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனியைச் சோ்ந்தவரான முருகேஷ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானாா்.