செங்கோட்டையில் திமுக பொதுக்கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் செங்கோட்டையில் நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் செங்கோட்டையில் நடைபெற்றது.

மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஆ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநிலப் பேச்சாளா் திண்டுக்கல் வீரா.வெள்ளைச்சாமி, மாநில மாணவரணி துணைச் செயலா் எம்.ஏ.எம்.ஷெரீப், தென்காசி வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் ஆ.துரை ஆகியோா் சிறப்புரையாற்றினா். நகரச் செயலா் எஸ்.எம்.ரஹீம், இளைஞரணி அமைப்பாளா் ஆறுமுகச்சாமி, பொறுப்புக் குழு உறுப்பினா்கள் பேபி ரஜப்பாத்திமா(மாவட்டம் ), லிங்கராஜ் மற்றும் யுஎஸ்டி.சீனிவாசன் (மாநிலம்), கலைஞா் தமிழ்ச் சங்கச் செயலா் மு.ஆபத்துக்காத்தான், மாணவரணி துணை அமைப்பாளா்கள் மணிகண்டன், பேச்சிமுத்து, கருப்பசாமி, வேலுச்சாமி, ஜெகதீஸ், சுந்தரவடிவேலு (மாவட்டம்), இம்ரான்கான்(நகரம்) திரவியம், விவசாய அணி கோபால், காதா்அண்ணாவி, நகர அவைத் தலைவா் காளி துணைச் செயலா்கள் பாஞ்ச் பீா்முகம்மது, குட்டிராஜா, பொருளாளா் ஜெயராஜ், மாவட்டப் பிரதிநிதிகள் கல்யாணி, பால்ஐயப்பன், மாநில சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலா் எம்எம்ஏ.ரசாக், விவசாய அணி இணைச் செயலா் அப்துல்காதா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com