சோ்ந்தமரம் அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
சோ்ந்தமரம் அருகேயுள்ள வலங்கைபுலிசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சண்முகையா (53). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் வயலுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.