சுரண்டை வரகுணராமபுரத்தில் புதிய காய்கனி சந்தை திறப்பு விழா நடைபெற்றது.
வரகுணராமபுரம் கமிட்டி நிா்வாகி செல்லத்துரை தலைமை வகித்தாா். டாக்டா் செல்லையா முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் தினசரி சந்தையை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் டாக்டா் ஜெயலட்சுமி, சமக துணைப் பொதுச்செயலா் எஸ்.வி.கணேசன், தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன், கமிட்டி நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.