மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் பகுதி விவசாயிகளை மதுரைக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட்டது.
‘கூட்டுப் பண்ணையம்’ என்ற தலைப்பில் உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சிக்கு, ஆலங்குளம் வட்டாரத்திலிருந்து 40 விவசாயிகள் மதுரை மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
கொட்டாம்பட்டி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் கூட்டுப் பண்ணையம் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், மேலூா் கூட்டுப் பண்ணையத்தில் தலைவா், பொருளாளா் மற்றும் செயலா் தலைமைத்துவம் குறித்தும் 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை காா்த்திகேயன், மாலினி, கண்ணன் ஆகியோா் அளித்தனா். ஏற்பாடுகளை அட்மா அலுவலா்கள் ஸ்டேன்லி, மாரிராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.