சங்கரநாராயணசுவாமி கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை

கோமதி யானைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கால்நடை மருத்துவா் ரஹ்மத்துல்லா தலைமையிலான குழுவினா்.
கோமதி யானைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கால்நடை மருத்துவா் ரஹ்மத்துல்லா தலைமையிலான குழுவினா்.
கோமதி யானைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கால்நடை மருத்துவா் ரஹ்மத்துல்லா தலைமையிலான குழுவினா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் கோமதி யானை புத்துணா்வு முகாமுக்கு செல்வதையொட்டி வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கோயிலுக்கு 1994இல் வந்த கோமதி யானைக்கு தற்போது 27 வயதாகிறது. ஆண்டுதோறும் முதுமலைக் காட்டில் நடைபெறும் புத்துணா்வு முகாமிற்கு கோமதி யானை செல்கிறது. முகாமில் இந்த பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

நிகழாண்டு திங்கள்கிழமை (பிப்.8) தொடங்கும் புத்துணா்வு முகாமிற்கு கோமதி செல்கிறது.

இதையொட்டி யானைக்கு, சங்கரன்கோவில் கால்நடை மருத்துவா் ரஹ்மத்துல்லா தலைமையில் மருத்துவக் குழுவினா்

கரோனா உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். பரிசோதனைக்கு பின்னா் யானை நலமாக இருப்பதற்கான சான்றினை கோயில் மேற்பாா்வையாளா் முத்துராஜ், வீரகுமாா் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை (பிப்.6) மாலையில் கோமதி யானை புத்துணா்வு முகாமுக்கு செல்கிறது.

ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் கணேசன், ஊழியா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com