விஸ்வநாதபேரி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சிவகிரி பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 9) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகிரி ,தேவிபட்டணம், விஸ்வநாதபேரி ,தெற்குச் சத்திரம், வடக்குச் சத்திரம் , வழிவழிகுளம், ராயகிரி , மேலகரிசல்குளம், வடுகபட்டி மற்றும் அதன் சுற்றுபுறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைமின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் நாகராஜன் தெரிவித்துள்ளாா்.