ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும் என பனங்காட்டுப்படை கட்சி ஒருங்கிணைப்பாளா் ஹரி நாடாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
ஆலங்குளம் பேரவைத் தொகுதி வேட்பாளராக அக்கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆலங்குளம் பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்களை அவா் சந்தித்தாா். அப்போது, அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், கட்டமைப்பு வசதிகள் இல்லை என அவரிடம் மக்கள் புகாா் கூறினா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனையாக மாறிய இந்த மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் இங்கு இல்லை. எனவே 10 தினங்களுக்குள் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமித்து, கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.
அப்போது, தென்காசி மாவட்டச் செயலா் ஆனந்த், மாவட்ட இளைஞரணிச் செயலா் ஜோசப், கொள்கை பரப்புச் செயலா்கள் விக்னேஷ் காா்த்திக், லாரன்ஸ், ஒன்றியச் செயலா் விஜயன், நகரச் செயலா் அலெக்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.