தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் கள அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா்.
நகரச் செயலா் சாதிா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வேலுச்சாமி வரவேற்றாா்.
மாநில அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வழக்குரைஞா்கள் கள அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினாா். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் வழக்குரைஞா் ராஜா, கடையம் ஜெயக்குமாா், மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளா்கள் மும்மது ரபி, ரகுமான் சாதத், முருகன், அன்புச்செல்வன், ஜான் தாமஸ் கேண்டா், கதிரவன், ராஜா, ஜெகதீசன், குற்றாலம் பேச்சிமுத்து, ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம், பேரூா் செயலா் மந்திரம், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா்கள் குற்றாலம் குட்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.