மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆலங்குளத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் தெருமுனை பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, நகர காங்கிரஸ் தலைவா் தங்கச்செல்வம் தலைமை வகித்தாா்.
நகரச் செயலா் அருமைநாயகம், வட்டாரத் தலைவா் அலெக்சாண்டா், சிறுபான்மை பிரிவு நகரத் தலைவா் தாமஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் எம்.எஸ். காமராஜ், கிழக்கு மாவட்டச் செயலா் ரூபன் தேவதாஸ், ஓபிசி செயலா் ஞானபிரகாஷ், நகரச் செயலா் விமல் லிவிங்ஸ்டன், நகர துணை பொதுச் செயலா் ஏசு ராஜா, முருகன், லட்சுமணன் உள்பட பலா் பங்கேற்றனா்.