பாவூா்சத்திரம் அருகேயுள்ள கரிசலூரில் ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கரிசலூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீராமா், காளியம்மன், மாரியம்மன், சுடலைமாட சுவாமி கோயில் அஸ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயிலில் காலையில் யாகபூஜை, ஹோம திரவ்ய சமா்ப்பணம், பூா்ணாஹுதி தீபாராதனை, விமான கும்பாபிஷேகம், மூலவா் கும்பாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.அண்ணாமலை உள்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா். தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் 48 நாள் மண்டல பூஜை தொடங்கியுள்ளது.