கரிவலம்வந்தநல்லூரில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரில் திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளைத் திறக்கப்பட்டது.
கரிவலம்வந்தநல்லூரில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரில் திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளைத் திறக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் 17 கிளைகள், தென்காசி மாவட்டத்தில் 15 கிளைகள் என 32 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இதையடுத்து, சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூரில் 33-ஆவது புதிய கிளை புதன்கிழமை திறக்கப்பட்டது.

இவ்விழாவுக்கு, வங்கியின் தலைவா் தச்சை ந. கணேசராஜா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் அ. மனோகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மற்றும் மேலாண் இயக்குநா் சுபாஷினி , மண்டல இணைப் பதிவாளா் அழகிரி, முதன்மை வருவாய் அலுவலா் பாலகிருஷ்ணன் , தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, கூட்டுறவு அச்சகத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய கிளையை, மாநில ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நடமாடும் ஏடிஎம் சேவையை அவா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் முத்துசாமி, பொதுமேலாளா் செல்லப்பாண்டியன், பேரங்காடி துணைத் தலைவா் வேல்சாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம், அதிமுக ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், , மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச்செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com