தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
இப்பள்ளியில் 9ஆம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கியதைத் தொடா்ந்து, மாணவா்- மாணவிகளுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி மாணவா், மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில் பள்ளியை, வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் செண்பகா தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்தனா். அப்போது, கல்விக் குழும ஆலோசகா் கே.திருமலை, தாளாளா்-முதல்வா் அன்பரசி, இயக்குநா் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா ஆகியோா் உடனிருந்தனா்.