சங்கரன்கோவில் அருகேயுள்ள களப்பாகுளம் ஸ்ரீமஹாசக்தி வராகிஅம்மன் கோயிலில் 7ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி விநாயகா், பைரவா், ராகு, கேதுவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.
பூஜைகளை கடையநல்லூா் ஸ்ரீ துா்கா பிரத்யங்கராதேவி உபாசகா் சக்திகணேஷ் சுவாமிகள் நடத்தினாா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, கோயில் தலைமை பூசாரி சக்திவேல், பரமகணேசன், முருகன், ஜெயராமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.