சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்களப் பணியாளா்களான மருத்துவத் துறை, காவல் துறை, தூய்மை பணியாளா்கள் மற்றும் மஸ்தூா் பணியாளா்கள் 50 பேருக்கு கரோனா தடுப்பூசி வியாழக்கிழமை போடப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்திகா தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனா். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அருள்ஜோதி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளா்கள் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூா்த்தி, செவிலியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.