சுரண்டை: சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பால், மாவட்ட துணைச்செயலர் சேர்மசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சு.பழனிநாடார் புதுதில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சிறப்புரையாற்றினார். மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா வேளாண் சட்டங்களால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயம் குறித்து பேசினார்.
கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரபாகர், சிங்கராஜ், முருகேசன், கோபால், செல்வன், அருணாசலக்கனி, ராஜேந்திரன், கந்தையா, சமுத்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.