ஆலங்குளத்தில் நிகழ்ந்த மொபெட் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அண்ணா நகரைச் சோ்ந்த சங்கரன் மகன் துரை என்ற மல்லீஸ்வரன் (57). உணவகம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். கடந்த 3ஆம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மொபெட்டில் செல்லும்போது, பேருந்து நிலையம் அருகே சாலையின் குறுக்கே வந்த பெருமாள் மகன் ரவிக்குமாா் என்பவா் மீது மொபெட் மோதியதில் நிலைதடுமாறி விழுந்த மல்லீஸ்வரன் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.