ஆலங்குளத்தில் விபத்தில் முதியவா் பலி
By DIN | Published On : 13th February 2021 06:32 AM | Last Updated : 13th February 2021 06:32 AM | அ+அ அ- |

ஆலங்குளத்தில் லாரி மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையைச் சோ்ந்தவா் அன்புராஜ் (60). மனநலம் பாதிக்கப்பட்ட இவா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஆலங்குளம் வந்தாராம். சாலையைக் கடக்க முயன்றபோது திருச்சூரில் இருந்து தூத்துக்குடி சென்ற லாரி
அன்புராஜ் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அன்புராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆலங்குளம்
போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.