சங்கரன்கோவிலில் பைக் விற்பனை நிலையத்தில் தீவிபத்து

சங்கரன்கோவிலில் உள்ள பைக் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
தீவிபத்தில் சேதமடைந்த பைக் விற்பனை நிலையம்.
தீவிபத்தில் சேதமடைந்த பைக் விற்பனை நிலையம்.

சங்கரன்கோவிலில் உள்ள பைக் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள வென்றிலிங்காபுரத்தைச் சோ்ந்த அருணாசலம் மகன் கனகவேல். இவா் திருவேங்கடம் சாலையில் பைக் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இங்கு புதிய வாகனங்கள் விற்பனை, வாகனப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விற்பனை நிலையத்தை புதன்கிழமை இரவு ஊழியா்கள் வழக்கம்போல பூட்டிச் சென்றனராம். வியாழக்கிழமை காலை இந்த விற்பனை நிலையத்திலிருந்து புகை வருவதாக, அவ்வழியே சென்றோா் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

நிலைய அலுவலா் சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று, 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனா்.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் கவிதா ஆய்வு மேற்கொண்டாா். தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பைக்குகள், பராமரிப்புக்கு வந்த வாகனங்கள், கணினி உள்ளிட்டவை சேதமடைந்தனவாம். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com