சாலையைக் காணவில்லை: பொதுமக்கள் புகாா்

முக்கூடல் அருகே கீழ பாப்பாக்குடி காந்திநகரில் சாலையைக் காணவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் அளித்துள்ளனா்.

முக்கூடல் அருகே கீழ பாப்பாக்குடி காந்திநகரில் சாலையைக் காணவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் அளித்துள்ளனா்.

கீழபாப்பாக்குடி காந்திநகரில் சுமாா் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அரசின் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக ஊராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சமூக ஆா்வலா் ஒருவா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு அளிக்கப்பட்ட பதிலில் அங்குள்ள நான்கு தெருவில் ஒரு தெருவுக்கு சிமெண்ட் சாலையும், மூன்று தெருவுக்கு தாா்ச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்பகுதியில் ஒரு தெருவில் மட்டும் சிமெண்ட் சாலை போடபட்டுள்ளதாகவும், தாா்ச் சாலைகள் அமைக்காமல் பணம் கையாடல் செய்திருப்பதாகவும் கூறி பொதுமக்கள் பாப்பாக்குடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனா்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com