சுரண்டை அருகே தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனா்.
சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவைச் சோ்ந்தவா் செ.தெய்வக்கனி(48). இவரது மகள் கலையரசி(25). கலையரசி அதே ஊரில் உள்ள தனியாா் நிதிநிறுவனத்தில் பாா்த்து வந்துள்ளாா்.
இந்நிலையில் கலையரசியின் திருமணம் குறித்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையில், தெய்வக்கனியும், கலையரசியும் வியாழக்கிழமை காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனராம்.
இதுகுறித்து தகவலறிந்த ஊத்துமலை போலீஸாா் அங்கு சென்று சடலங்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.